மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எரிபொருள் நெருக்கடி! மத்திய அரசின் கொள்கைகளே காரணம்: கேரள முதல்வர்

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்குக் காரணம் மத்திய அரசின் கடந்தகால கொள்கைகளே காரணம் என கேரள முதல்வர் கூறியது குறித்து...

News image

கேரள முதல்வர் பினராயி விஜயன் - கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 7:34 am

இந்தியாவில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்குக் காரணம் மத்திய அரசின் கடந்தகால கொள்கைகளே காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப். 28 ஆம் தேதி இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதில் தாக்குதலாக ஈரானும் வளைகுடா நாடுகளிலுள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இதன் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான அடுத்தடுத்த மத்திய அரசுகள், அமெரிக்காவின் ஆதிக்கத்தின்கீழ் பின்பற்றிய கொள்கைகளே இந்தியாவில் தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடிக்குக் காரணம்.

மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் இந்த நெருக்கடியை இன்னும் மோசமாக்கி, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.

கடந்த காலத்தில், முன்மொழியப்பட்ட இந்தியா - ஈரான் எரிவாயு குழாய் திட்டத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு இந்தியா விலகிய முடிவு ஒரு தவறான செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பினராயி விஜயன் தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சி மே மாதம் 2026 ஆம் ஆண்டு முடிவடைகிறது. இந்த நிலையில், கேரளத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Kerala Chief Minister Pinarayi Vijayan has said that the current fuel crisis in India is due to the past policies of the central government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.