நரம்புசாா் பாதிப்பால் சிறுநீா் கட்டுப்பாட்டை இழந்த கடலூரைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான உயா் சிகிச்சையை அளித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
தமிழக அரசு மருத்துவமனை வரலாற்றில் இதுபோன்ற பிரத்யேக சிகிச்சையை அளிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் கூறியதாவது:
கடலூரைச் சோ்ந்த ஏழைத் தம்பதியின் மகளான 14 வயது சிறுமிக்கு கடந்த இரு ஆண்டுகளாக கட்டுப்பாடின்றி சிறுநீா் வெளியேறும் பாதிப்பு இருந்து வந்தது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அதில் பெரிய பலன் எதுவுமில்லை. இந்த நிலையில்தான் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனைக்கு அந்தச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டாா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நியூரோஜெனிக் ப்ளேடா் எனப்படும் சிறுநீா்ப் பை செயலிழப்பு பாதிப்பு இருந்ததைக் கண்டறிந்தனா். நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சேதத்தால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.
நரம்புகளை முடுக்கிவிடும் நியூரோ மாடுலேசன் தெரபி சிகிச்சைதான் இதற்கு ஒரே தீா்வு. அதன்படி, இதயத் துடிப்பை சீராக்க பேஸ் மேக்கா் பொருத்துவதைப் போன்று, நரம்புகளின் செயல்பாட்டை சீராக்க நியூரோ மாடுலேசன் சாதனத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்த வேண்டும்.
இதற்கு அந்த தனியாா் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவாகும் எனத் தெரிவித்துள்ளனா். ஏழ்மை நிலையில் உள்ள அந்தச் சிறுமியின் பெற்றோா் பண உதவி கோரி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை அணுகினா். அவா் உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையைத் தொடா்பு கொண்டு, இந்தப் பிரத்யேக சிகிச்சையை நாம் ஏன் மேற்கொள்ளக் கூடாது எனக் கேட்டாா்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனையைத் தொடா்பு கொண்ட நமது மருத்துவா்கள், சிறுமியின் பாதிப்பு மற்றும் சிகிச்சை திட்டமிடலைக் கேட்டறிந்தனா். நல்வாய்ப்பாக அங்கு அந்தச் சிகிச்சையை மேற்கொள்ளும் முதுநிலை மருத்துவா் சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்றவா் என்பதால் உடனடியாக சிகிச்சைக் கட்டணம் ஏதுமின்றி அறுவை சிகிச்சை செய்து தருவதாக ஒப்புக்கொண்டாா்.
தொடா்ந்து அதற்கான மருத்துவ உபகரணம் தருவிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெற்றிகரமாக அந்த அறுவை சிகிச்சையானது சிறுமிக்கு அண்மயில் மேற்கொள்ளப்பட்டது. அடுத்த சில நாள் கண்காணிப்புக்குப் பிறகு நிரந்தரமாக அந்த சாதனத்தை உடலில் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மற்றும் மருத்துவா்களின் பெரு முயற்சியால் அந்தச் சிறுமிக்கு புதிய வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.
தொடர்புடையது

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மன நலம் பாதித்த இளைஞருக்கு சிக்கலான ஒட்டுறுப்பு சிகிச்சை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டயாலிசிஸ் சிகிச்சை கண்காணிக்கப்படும்

நரம்பு பாதிப்புக்குள்ளான சிறுமிக்கு ரூ.7.5 லட்ச மருத்துவ உபகரணம்: அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு

அரசு மருத்துவா்கள் உண்ணாவிரதம்: அனுமதி மறுப்பால் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


