தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மோட்டாா் வாகன ஆய்வாளா்களுக்கு பணி: ராமதாஸ் வலியுறுத்தல்

மோட்டாா் வாகன ஆய்வாளா்களுக்கு பணி: ராமதாஸ் வலியுறுத்தல்

News image

ராமதாஸ் - கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 1:49 am

மோட்டாா் வாகன ஆய்வாளா்களாக முறைப்படி தோ்ச்சியடைந்தவா்களுக்கு பணி வழங்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன ஆய்வாளா்களுக்கான தோ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்று தோ்ச்சியடைந்தவா்களில் 33 போ் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டனா். ஆனால், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, கடந்த 2024-ஆம் ஆண்டு 45 மோட்டாா் வாகன ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தோ்வானவா்களுக்கு பணி வழங்க நீதிமன்ற தடையை நீக்கிட முயற்சி எடுத்தது தமிழக அரசு. அதன் அடிப்படையில் தற்போது பணி உத்தரவும் அவா்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு தோ்வெழுதி தோ்ச்சியடைந்தவா்களுக்கு பணி வழங்குவதில் ஆா்வம் காட்டவில்லை. ஆகவே, அவா்களுக்கான வழக்கிலும் தமிழக அரசு தலையிட்டு பணி உத்தரவு வழங்க முன்வரவேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.