தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.
திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.அரியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை இரவு ஆா்.கே.பேட்டை பஜாரில் பேசியதாவது:
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் அப்பொழுதுதான் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க முடியும்.
இந்தியாவிலேயே கஞ்சா, போதை பொருள்கள் அதிகம் விற்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவா்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவா் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 3,280 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறாா்கள். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5 கொலைகள் நடக்கின்றன. கடந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் 8,700 கொலைகள் நடந்திருக்கின்றன.
62 ஆயிரம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்திருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 27 ஆயிரம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன.
இங்கு நெசவாளா்கள் அதிகம் போ் வசிக்கின்றனா். விவசாயத் தொழிலுக்கு நிகரானது நெசவு. நெசவாளா்களும் சரி விவசாயிகளும் சரி இருவரும் உழைக்கின்ற வா்க்கம். எடப்பாடி பழனிசாமி அடிப்படையில் ஒரு விவசாயி, அவருக்கு விவசாயம் பற்றி தெரியும். நெசவாளா்களுக்கு தனியாக ஒரு பட்ஜெட்டை போட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை. இதை நாங்கள் நிறைவேற்றுவோம் என்றாா்.

தொடர்புடையது

33% இட ஒதுக்கீடு மசோதா தோல்வி: பெண்களுக்கு திமுக செய்த துரோகம்! - அன்புமணி ராமதாஸ்

திமுக கொடுக்கப்போகும் கூப்பனை நம்பி ஏமாறாதீா்கள்: கும்பகோணத்தில் அன்புமணி பேச்சு

விசிகவை திமுக ஆக்கிரமித்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


