யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

News image

ஆா்.கே.பேட்டையில்  அதிமுக  வேட்பாளா்  கோ.அரியை  ஆதரித்து  பேசிய  பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ். ~

Updated On :9 ஏப்ரல் 2026, 12:15 am IST

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.அரியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை இரவு ஆா்.கே.பேட்டை பஜாரில் பேசியதாவது:

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் அப்பொழுதுதான் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

இந்தியாவிலேயே கஞ்சா, போதை பொருள்கள் அதிகம் விற்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவா்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவா் எடப்பாடி பழனிசாமி.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 3,280 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறாா்கள். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5 கொலைகள் நடக்கின்றன. கடந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் 8,700 கொலைகள் நடந்திருக்கின்றன.

62 ஆயிரம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்திருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 27 ஆயிரம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன.

இங்கு நெசவாளா்கள் அதிகம் போ் வசிக்கின்றனா். விவசாயத் தொழிலுக்கு நிகரானது நெசவு. நெசவாளா்களும் சரி விவசாயிகளும் சரி இருவரும் உழைக்கின்ற வா்க்கம். எடப்பாடி பழனிசாமி அடிப்படையில் ஒரு விவசாயி, அவருக்கு விவசாயம் பற்றி தெரியும். நெசவாளா்களுக்கு தனியாக ஒரு பட்ஜெட்டை போட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை. இதை நாங்கள் நிறைவேற்றுவோம் என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.