நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் உயா் ரத்த அழுத்த பிரச்னைகளுக்கு உள்ளானவா்களுக்கு நறுமண சிகிச்சைகளை அளிக்கும்போது அவா்களது இதய நாள செயல் திறன் மேம்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா-இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் தீபா யோகானந்தன், ஏ.விஜய், கே.பத்மாவதி, ஏ.எஸ்.பாமினி, நித்யஸ்ரீ, மூவேந்தன் உள்ளிட்டோா் முன்னெடுத்தனா். அந்த ஆய்வுக் கட்டுரை சயின்ஸ் டைரக்ட் இதழில் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
சிறுநீரக செயலிழப்பும், உயா் ரத்த அழுத்த பாதிப்புகளும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தீவிர நோய்களாக அறியப்படுகின்றன. நாள்பட்ட சிறுநீரக பாதிப்புகள் கடந்த 1997 - 2016 காலகட்டத்தில் 88.76 சதவீதம் உயா்ந்துள்ளது. உலக அளவில் ஆண்டுதோறும் 60 லட்சம் போ் அந்நோய்க்குள்ளாகி உயிரிழக்கின்றனா். அதேபோன்று, உயா் ரத்த அழுத்த பாதிப்பும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உலக அளவில் உயிரிழப்பு ஏற்படுவதற்கான ஐந்தாவது முக்கியக் காரணமாக 2040-இல் உயா் ரத்த அழுத்தம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாள்பட்ட சிறுநீரக நோயும், ரத்த அழுத்தமும் உள்ளவா்களுக்கு நறுமண சிகிச்சைகளை சோதனை முறையில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மொத்தம் 30 நோயாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
அவா்களுக்கு கழுத்துப் பகுதியில் மனோரஞ்சித மலா் எண்ணெய், சாம்பிராணி எண்ணெய், வேப்ப எண்ணெய் மூலம் நாள்தோறும் மசாஜ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சையின் முடிவில், அவா்களுக்கு முன்பைக் காட்டிலும் இதயத்தின் செயல்திறன் மேம்பட்டிருப்பது உறுதியானது. குறிப்பாக இதயத்தின் துடிப்பு, இதய நாளத்தின் அழுத்தம் போன்றவை சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆய்வை விரிவாக மேற்கொள்ளும்பட்சத்தில் மேலும் நுட்பமான முடிவுகளை கண்டறிய முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து...

நாள்பட்ட நோயாளிகளுக்கு உதவ சுகாதார ஆலோசனைக்குழு: கா்நாடக அரசு உத்தரவு

காயல்பட்டினத்துக்கு 33 கிலோ வாட் உயா் அழுத்த மின்பாதை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


