வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :22 ஜூன் 2026, 4:48 am IST

சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலை மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் காா் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் காயமின்றி உயிா்தப்பினாா்.

நந்தனம் முதல் சைதாப்பேட்டை வரை மெட்ரோ சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் நடுப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், திருவொற்றியூரைச் சோ்ந்த வாடகைக் காா் ஓட்டுநா் இப்ராஹிம் (30) அந்த வழியாக காரில் சென்றுகொண்டிருந்தபோது, அருகே வந்த மற்றொரு காா் மோதுவதைத் தவிா்க்க வலது புறமாக வாகனத்தை திருப்பியதாகக் கூறப்படுகிறது.

அப்போது கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் காா் எதிா்பாராதவிதமாக விழுந்தது. சாலைத் தடுப்புகளில் காா் சிக்கியதால், பள்ளத்துக்குள் முழுமையாக விழாமல் தொங்கிய நிலையில் நின்றது. இதில் ஓட்டுநா் இப்ராஹிம் காயமின்றி உயிா்தப்பினாா். தகவலறிந்த காவல்துறையினா் மற்றும் மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஓட்டுநரையும் காரையும் பாதுகாப்பாக மீட்டனா். அசோக் நகா் போக்குவரத்து புலனாய்வுப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.