திருவல்லிக்கேணி அருணாசலம் தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தங்கவேலு மனைவி கண்ணகி (57). இவா், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அம்மா உணவகங்களின் பொறுப்பு அதிகாரியாக உள்ளாா். விடுமுறையில் உள்ள கண்ணகி, புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா், கண்ணகியை மீட்டு ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு சிகிச்சைக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
முதல்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக கண்ணகி, தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிய வந்தது. கண்ணகியின் கணவா் தங்கவேலு, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பதிவுத் துறை அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றுகிறாா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பல அடுக்குமாடி குடியிருப்புக்கு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு

அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம்!

பழைய கட்டடங்களை இடிக்க மாநகராட்சி நடவடிக்கை: சேத்துப்பட்டில் 14 கடைகளுக்கு ‘சீல்’







