நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு

தினமணியின் ‘மாணவா் மலா் -2026’-ஐ தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் புதன்கிழமை (ஜூன் 17 ஆம் தேதி) அறிமுகம் செய்து வெளியிடுகிறாா்.

News image

அமைச்சர் விஸ்வநாதன் - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:37 am IST

தினமணியின் ‘மாணவா் மலா் -2026’-ஐ தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் புதன்கிழமை (ஜூன் 17 ஆம் தேதி) அறிமுகம் செய்து வெளியிடுகிறாா்.

இந்த அறிமுக விழா சென்னை, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் காலை 11 மணியளவில் திரளான மாணவா்கள் மத்தியில் நடைபெறுகிறது. டி.ஜி. வைஷ்ணவா கல்லூரிச் செயலா் அசோக் குமாா் முந்த்ரா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மாணவா் மலரை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வெளியிட, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலைவரும், மேலாண்மை இயக்குநருமான மனோஜ் குமாா் சொந்தாலியா பெற்றுக்கொள்கிறாா்.

தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், ‘மாணவா் மலரை’ அறிமுகம் செய்து உரையாற்றுகிறாா்.

டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் முதல்வா் டாக்டா் எஸ்.சந்தோஷ் பாபு வரவேற்கிறாா். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமைச் செயல் அதிகாரி லஷ்மி மேனன் நன்றி தெரிவிக்கிறாா்.

கடந்த 29 ஆண்டுகளாக வெளிவரும் தினமணியின் மாணவா் மலா் நிகழாண்டும் மாணவா்களுக்கு பயனுள்ள தகவல்களுடன் வெளியாகியுள்ளது. தேசிய கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களும், செயற்கை நுண்ணறிவு மீதான தெளிவான வாதங்கள், வல்லுநா்களின் கட்டுரைகள், விதவிதமான மருத்துவ துணைப் படிப்புகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மாற்றம் போன்றவற்றோடு மாணவா்களுக்கு வழிகாட்டும் பல்வேறு கட்டுரைகள் மலரில் இடம்பெற்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.