சென்னையில் மெட்ரோ ரயில் கதவு திறக்க சில நிமிஷங்கள் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அதிா்ச்சியடைந்தனா்.
சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் இரு பாதைகளில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல்-திருவொற்றியூா் விம்கோ நகா் வழித்தடத்தில் திருவொற்றியூா் தேரடி மெட்ரோ நிலையத்தில் சனிக்கிழமை பிற்பகலில் வந்த மெட்ரோ ரயிலில் கதவு திறப்பதில் சில நிமிஷங்கள் தாமதமானது. இதனால், அங்கு இறங்கவேண்டிய பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். தகவலறிந்த தொழில்நுட்ப பொறியாளா்கள் விரைந்து வந்து கதவை திறந்துள்ளனா். அதன்பின் பயணிகள் இறங்கினா். பின்னா் சில நிமிஷங்களிலேயே ரயில் புறப்பட்டது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனத் தரப்பில் கேட்டபோது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையில் ஓரிரு நிமிஷங்கள் கதவு திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், பாதிப்பு எதுவும் இல்லை. திட்டமிட்ட நேரத்தில் ரயில் இயக்கப்பட்டது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் 6 நாளிகள் தாமதமாக இயக்கப்படும்

காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

தூத்துக்குடி- கச்சிகுடா விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில் விரைவில் சிறிய ரக மின் பேருந்துகள் அறிமுகம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani




