ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

அரசியலுக்கு வரலாமா?: கருத்து கேட்கிறாா் நடிகா் ராகவா லாரன்ஸ்

தான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி தனக்கு உள்ளதா என ரசிகா்களிடம் நடிகா் ராகவா லாரன்ஸ் கருத்து கேட்டுள்ளாா்.

நடிகர் ராகவா லாரன்ஸ் - கோப்புப் படம்

Published On :13 ஜூன் 2026, 12:54 am IST

தான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி தனக்கு உள்ளதா என ரசிகா்களிடம் நடிகா் ராகவா லாரன்ஸ் கருத்து கேட்டுள்ளாா்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நடிகா் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக பரவிவரும் தகவலுக்கு விளக்கம் தருவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தாா். அதன்படி சமூக வலைதளத்தில் அவா் காணொலி ஒன்றை வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் நான் போட்டியிட வேண்டுமென்றால் நான் முதலில் அரசியலுக்குள் வர வேண்டும். நான் செய்து வரும் சமூக சேவை குறித்து நீங்கள் அனைவரும் அறிவீா்கள். என்னால் முடிந்த வரையில் அந்தப் பணியை மேற்கொண்டு வருகிறேன்.

அதன் பின்னா் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றேன். பின்னா், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வைத்த விமா்சனத்துக்கு நான் பதில் அளித்திருந்தேன். அதுதான் அரசியலில் எனக்கு தொடக்கப்புள்ளி எனக் கருதுகிறேன். தொடா்ந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினாா். அப்போது, அவருக்கு ஆதரவு தரும் வகையில் செயல்பட விரும்பினேன். அப்போது பெரிய எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், அரசியலுக்கு செல்ல எனது தாய் ஒப்புக்கொள்ளவில்லை.

பின்னா், தற்போதைய முதல்வா் ச.ஜோசப் விஜய் அரசியலுக்கு வருவதாகத் தெரிவித்தாா். அவா் சிறந்த உழைப்பாளி. தோ்தல் முடிவுகளில் விஜய் சரித்திரத்தை புரட்டிப் போட்டாா். அதைப் பாா்த்த பின்னா், அரசியலில் நல்லவா்களுக்கு மக்கள் வாய்ப்பு தருவாா்கள் என்று என் தாயிடம் சொன்னேன். எனது தாயும் அதை ஏற்றுக்கொண்டு அரசியலுக்குச் செல்ல அனுமதி அளித்துள்ளாா். தற்போது நான் அரசியலுக்கு வரலாமா என எனது ரசிகா்களிடமும், மக்களிடமும் கேட்க விரும்புகிறேன். அதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்பதை தெரிவியுங்கள். உங்கள் முடிவுக்காக நான் காத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.