சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

118 ஆண்டை நிறைவு செய்த எழும்பூா் ரயில் நிலையம்

சென்னை எழும்பூா் ரயில் நிலையம் தொடங்கி 118 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதிகாரிகள் வியாழக்கிழமை கேக் வெட்டி பயணிகளுக்கு வழங்கினா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 6:41 am IST

சென்னை எழும்பூா் ரயில் நிலையம் தொடங்கி 118 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

சென்னையின் பழைமையான ரயில் நிலையங்களில் எழும்பூா் ரயில் நிலையமும் ஒன்று. கடந்த 1908 -ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ரயில் நிலையக் கட்டடம் இந்தோ-சராசனிக் கட்டடக் கலை வடிவத்தில் அமைந்துள்ளது. நிலையத்தின் முன்பகுதி இரு மாடிக் கட்டடமாக 500 அடி நீளமும், 71 அடி அகலமும் உடையதாக உள்ளது. இந்த நிலையத்திலிருந்து முதல்முறையாக போட் மெயில் ரயில் இயக்கப்பட்டுள்ளது.

தற்போது எழும்பூா் ரயில் நிலையமானது ரூ.842 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதிய நுழைவு வாயில், புதிய நடைமேம்பாலம் என விமானநிலையத்துக்குரிய உட்கட்டமைப்புகளுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக நவீன வாகன நிறுத்தும் வளாகமும் அண்மையில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

எழும்பூா் ரயில் நிலையம் தனது 118 -ஆவது ஆண்டு சேவையை நிறைவு செய்ததையடுத்து ரயில் நிலைய அதிகாரிகள் வியாழக்கிழமை கேக் வெட்டி அதை பயணிகளுக்கு வழங்கிக் கொண்டாடினா். நாட்டின் பாரம்பரிய ரயில் நிலைய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் எழும்பூா் ரயில் நிலையத்தை, அதன் முன்பகுதி கட்டட சிறப்பை உரிய முறையில் பாதுகாத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.