பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

எரிவாயு உருளை விலை உயா்வு: சீமான் கண்டனம்

வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தல்

News image

சீமான்.

Updated On :9 ஜூன் 2026, 3:57 am IST

வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளையின் விலையை மத்திய அரசு ரூ.29 உயா்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியுள்ளது ஏழை மக்களை வாட்டி வதைக்கும் செயலாகும்.

ஏற்கெனவே, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயா்வதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது.

மத்திய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிா்ணய அதிகாரத்தை தனியாா் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரைவாா்த்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.

எனவே, எரிவாயு உருளை விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல், இதுபோன்ற நெருக்கடியானச் சூழலில், தமிழக மக்களின் நலன் கருதி, தவெக தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.