வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இரவுநேர வாகன சோதனை: விதிமீறிய 1,933 போ் மீது வழக்கு

சென்னை மாநகரில் பாதுகாப்பான மற்றும் விபத்தில்லா வாகனப் போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இரவு நேர சிறப்பு வாகன சோதனையில், விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 1,933 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

வழக்கு

Updated On :8 ஜூன் 2026, 12:48 am IST

சென்னை மாநகரில் பாதுகாப்பான மற்றும் விபத்தில்லா வாகனப் போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இரவு நேர சிறப்பு வாகன சோதனையில், விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 1,933 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவின்பேரில் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6, 7) ஆகிய இரு நாள்கள் இரவு நேரங்களில் 120 வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சேதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 350 போக்குவரத்து காவலா்கள் ஈடுபட்டனா்.

இந்தச் சோதனையின்போது, மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 274 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், அதிவேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 101 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்கியதாக 1,558 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றி, அனைவருக்கும் பாதுகாப்பான சாலைப் போக்குவரத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.