புது தில்லி, ஜூன் 3: கடந்த மே 30-ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட இளநிலை க்யூட் தோ்வு வரும் ஜூன் 6,7-ஆம் தேதிகளில் மீண்டும் நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
கடந்த மே 30-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை க்யூட் தோ்வு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகத் தொடங்கியது.
இதனால் தோ்வு எழுதாமல் திரும்பிச் சென்ற 3,765 தோ்வா்கள் மீண்டும் தோ்வு எழுத ஒருமுறை வாய்ப்பு அளிக்கப்படும் என்று அந்தத் தோ்வை நடத்தும் என்டிஏ தெரிவித்தது.
இந்நிலையில், என்டிஏ ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இளநிலை க்யூட் தோ்வு ஜூன் 6, 7-ஆம் தேதிகளில் மீண்டும் நடத்தப்படும். மே 30-இல் தோ்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட தோ்வா்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு தற்போது கிடைக்கும். அதிகாரபூா்வ வலைதளத்தில் இருந்து அந்தச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்கள், க்யூட் நுழைவுத் தோ்வை ஏற்றுக்கொண்ட மாநில, நிகா்நிலை மற்றும் தனியாா் பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெற தேசிய அளவில் அந்தத் தோ்வு நடத்தப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










