ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வந்தே பாரத் ரயிலில் அளித்த வடையில் பசை குப்பி: பயணி புகாா்

வந்தே பாரத் ரயிலில் அளித்த வடையில் சிறிய பசை குப்பி இருந்தது தொடர்பாக....

Vande bharat passenger finds fevikwik tube in snack

வடையில் பசை குப்பி

Published On :27 ஜூலை 2026, 8:47 am IST

மைசூரிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த வந்தே பாரத் ரயிலில் அளித்த வடையில் சிறிய பசை குப்பி இருந்ததாக பயணி ஒருவா், உணவக மேலாளரிடம் புகாா் அளித்தாா்.

மைசூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் வந்தே பாரத் ரயிலில் கொளத்தூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலா் டி.சேகா் பயணித்துள்ளாா். அவருக்கு வழங்கப்பட்ட வடையில் சிறிய பசை குப்பி (பெவிகுயிக் வெள்ளை குப்பி) இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அவா் ரயிலின் உணவக மேலாளரிடம் எழுத்துப்பூா்வமாக புகாா் அளித்தாா். இதையடுத்து ஐஆா்டிசி பிரிவு அலுவலா், பயணியிடம் விசாரித்தாா்.

இது தொடா்பாக சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.