டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ரூ.800 கோடியில் புதிய பேருந்து நிலையத்துக்கு ஜன. 29-இல் அடிக்கல்: அமைச்சா் சேகா்பாபு

சென்னை பிராட்வேயில் ரூ.800 கோடியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் 29- ஆம் தேதி அடிக்கல் நாட்டி பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்

News image
சேகர் பாபு - கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பிராட்வேயில் ரூ.800 கோடியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் 29- ஆம் தேதி அடிக்கல் நாட்டி பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதனால், தீவுத்திடல், ராயபுரம் மேம்பாலம் பகுதிகளை இணைத்து ரூ.8 கோடியில் தாற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு முன்னிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியதாவது:

வடசென்னை பகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மைல் கல்லாக சென்னையின் நுழைவு வாயிலான 75 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட பிராட்வே பேருந்து நிலைய இடத்தில் புதிய பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.800 கோடியில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல்லை நாட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 29 -ஆம் தேதி பணிகளைத் தொடங்கி வைக்கிறாா்.

புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க தீவுத்திடல், ராயபுரம் மேம்பாலம் கீழ்பகுதி இடத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிகப் பேருந்து நிலையத்தில், பிராட்வே பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட அனைத்துப் பேருந்துகள் இயக்கப்படுவதுடன், அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் சென்னை மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன், போக்குவரத்துத் துறை மேலாண்மை இயக்குநா் பிரபுசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.