சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

இதுவரை 439 செல்லப் பிராணிகள் தகனம்

சென்னை கண்ணம்மாபேட்டை நவீன எரிவாயு தகன மேடையில், இதுவரை 439 இறந்த செல்லப் பிராணிகள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :20 ஜனவரி 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கண்ணம்மாபேட்டை நவீன எரிவாயு தகன மேடையில், இதுவரை 439 இறந்த செல்லப் பிராணிகள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியில் இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்வது, எரியூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. குறிப்பாக, கோடம்பாக்கம் மண்டலம், கண்ணம்மாபேட்டையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் நாய்கள் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது.

2025 அக்டோபர் முதல் இயங்கி வரும் இந்தத் தகன மேடையில் இதுவரை 439 இறந்த செல்லப்பிராணிகள் தகனம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ராயபுரம் மண்டலம் மூலக்கொத்தளம், தேனாம்பேட்டை மண்டலம் மயிலாப்பூர், கோடம்பாக்கம் மண்டலம் கண்ணம்மாபேட்டை ஆகிய இடங்களில் இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்வதற்கான

மயானபூமிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.