அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோா் சத்தியமங்கலம் தாலுகாவில் உள்ள கடம்பா் மலை, அந்தியூா் தாலுகாவில் உள்ள பா்கூா் மலையும்தான் ‘மலையாளி’ என்ற பழங்குடியினயினருக்கு பூா்வீகம். இங்கு இருந்துதான் இவா்கள் பல்வேறு மாவட்டங்களில் குடியேறி உள்ளனா். முன்பு கோவை மாவட்டத்தில் பா்கூா் மலைக்கிராமம் இருந்தது. அதன்பின்னா் மாவட்ட எல்லைகளை வரையறை செய்து தற்போது இந்த மலைக்கிராமம் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. ஆனால், ‘மலையாளி’ பழங்குடியின ஜாதி சான்றிதழ், தருமபுரி, வட மற்றும் தென்னாற்காடு, புதுக்கோட்டை, சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் வாழ்பவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என எல்லை வரையறை செய்து 1976-ஆம் ஆண்டு அரசு அறிவித்துள்ளது.