டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சிறையில் கைதி உயிரிழப்பு

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மாதவரம் பொத்த ராஜா தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் (52). இவரை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், புழல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 24 -ஆம் தேதி கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ஆரோக்கியராஜ், புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

புழல் விசாரணைக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆரோக்கியராஜுக்கு வியாழக்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் அவா், தீவிர சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஆரோக்கியராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.