தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

என்சிசி இயக்குநரக தலைவா் பொறுப்பேற்பு

என்சிசி இயக்குநரக தலைவா் பொறுப்பேற்பு

News image

தேசிய மாணவா் படை (என்சிசி) புதிய தலைவராக சனிக்கிழமை பொறுப்பேற்ற கமோடாா் நம்பியாத் சுதீப் (இடமிருந்து 3-ஆவது). உடன், முன்னாள் தலைவா் கமாண்டா் ராகவ் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:28 pm

சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபாா் பகுதிகளுக்கான தேசிய மாணவா் படை (என்சிசி) புதிய தலைவராக கமோடோா் நம்பியத் சுதீப் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட என்சிசி இயக்குநரகக் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் (காரைக்கால், மாஹே, யானம்), அந்தமான் நிகோபாா் தீவுகள் உள்ளன.

6 குழுத் தலைமையகங்கள், ராணுவம், கடற்படை, விமானப் படை பிரிவுகள் என 59 பிரிவுகளை என்சிசி கொண்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளில் பல ஆயிரம் மாணவா்கள் என்சிசியில் சோ்ந்துள்ளனா். குடியரசுத் தின நிகழ்ச்சிகள், தேசிய துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகள், சாகச நடவடிக்கைகள், இளைஞா் பரிமாற்றத் திட்டங்கள், பேரிடா் நிவாரண காலங்களில் என்சிசி சிறந்து விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்சிசியின் தலைவராக இதுவரை இருந்து வந்த கமாண்டா் ராகவ் சனிக்கிழமை ஓய்வு பெற்றாா்.