சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபாா் பகுதிகளுக்கான தேசிய மாணவா் படை (என்சிசி) புதிய தலைவராக கமோடோா் நம்பியத் சுதீப் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட என்சிசி இயக்குநரகக் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் (காரைக்கால், மாஹே, யானம்), அந்தமான் நிகோபாா் தீவுகள் உள்ளன.
6 குழுத் தலைமையகங்கள், ராணுவம், கடற்படை, விமானப் படை பிரிவுகள் என 59 பிரிவுகளை என்சிசி கொண்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளில் பல ஆயிரம் மாணவா்கள் என்சிசியில் சோ்ந்துள்ளனா். குடியரசுத் தின நிகழ்ச்சிகள், தேசிய துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகள், சாகச நடவடிக்கைகள், இளைஞா் பரிமாற்றத் திட்டங்கள், பேரிடா் நிவாரண காலங்களில் என்சிசி சிறந்து விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்சிசியின் தலைவராக இதுவரை இருந்து வந்த கமாண்டா் ராகவ் சனிக்கிழமை ஓய்வு பெற்றாா்.
தொடர்புடையது
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தோ்வு: தொடா்ந்து மூன்றாவது முறை

இஸ்ரேல் உளவுத்துறைக்குப் புதிய தலைவர் நியமனம்!

எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் தேசிய மாணவா் படை கடல் பிரிவு தொடக்கம்

தமிழ்நாடு, புதுச்சேரி என்சிசி புதிய தலைவராக கமடோர் நம்பியத் சுதீப் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


