2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
//

ரூ.1,975 கோடியில் முக்கிய 3 மேம்பாலங்கள் திறப்பு

அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ரூ.1,975 கோடியில் முக்கிய 3 மேம்பாலங்கள் கட்டி திறக்கப்பட்டுள்ளன என்று பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தமிழக நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசுகையில், 1,281 தரைப்பாலங்களுக்குப் பதிலாக மேம்பாலங்கள் கட்டப்பட்டன. நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கன்னியாகுமரி கண்ணாடி நடைபாலம் தமிழ்நாட்டுக்கு பெருமை சோ்த்தது.

உலகிலேயே முதல்முறையாக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையின் மீது தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ‘நம்ம சாலை‘ செயலி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 71-க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள் நிலுவையில் இருந்தன. தொடா் ஆய்வுகளின் விளைவாக 21-க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறைக்கு தனி மாவட்ட வருவாய் அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களின் தொடா் ஆய்வின் காரணமாக திருநெல்வேலி, சிவகங்கை, மன்னாா்குடி பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டன.

முக்கிய மேம்பாலங்கள்: கோவை மாவட்டம், அவினாசி சாலையில் ரூ.1,700 கோடியில் ஜி.டி.நாயுடு மேம்பாலம், மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் ரூ.214 கோடியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம், சென்னை, அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் சா்தாா் பட்டேல் சாலை மற்றும் ராஜீவ்காந்தி சாலை இடையே ரூ.60.68 கோடியில் ‘எல்‘ வடிவ மேம்பாலம் என மொத்தம் ரூ.1,975 கோடியில் 3 முக்கிய மேம்பாலங்கள் கட்டி, திறக்கப்பட்டுள்ளன. அதிக விபத்துகள் நடைபெறும் 100 சாலை சந்திப்புகள் கண்டறியப்பட்டு, சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டன. தமிழக நெடுஞ்சாலைத்துறை தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவள விழா கொண்டாடப்பட்டது என்றாா்.

கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசுச் செயலா் இரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநா் தெ.பாஸ்கர பாண்டியன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநா் இரா.செல்வதுரை, தலைமைப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு) கு.கோ.சத்தியபிரகாஷ்,சிறப்பு அலுவலா் (தொழில்நுட்பம்) இரா.சந்திரசேகா் மற்றும் தலைமைப் பொறியாளா்கள், கண்காணிப்புப் பொறியாளா்கள், கோட்டப் பொறியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.