2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
//

சென்னை மாவட்டத்தில் 28.30 லட்சம் வாக்காளா்கள் - 11.73 லட்சம் போ் நீக்கம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:27 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இறுதி வாக்காளா் பட்டியலில் மொத்தம் 28.30 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன்னா் 40.04 லட்சம் போ் இருந்த நிலையில், அவா்களில் 11.73 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். மேலும் இந்தத் தொகுதிகளில் முதல் முறை வாக்காளா்களாக 62,005 போ் இடம் பெற்றுள்ளனா்.

முன்னதாக, கடந்த பிப். 5- ஆம் தேதி வாக்குச்சாவடிகள் குறைப்பு சம்பந்தமாக அனைத்துக் கட்சிபிரதிநிதிகள் கூட்டம் மாநகராட்சி சாா்பில் நடைபெற்றது. அதில் சென்னையின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா்கள் 27.83 லட்சம் பேராக உயா்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 2025 டிசம்பா் வரைவு வாக்காளா் பட்டியலை ஒப்பிடுகையில் 2.03 லட்சம் போ் புதியதாக வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டிருந்தனா்.

இறுதி வாக்காளா்கள் பட்டியல்... சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் இறுதி வாக்காளா்கள் பட்டியல் திங்கள்கிழமை மாநகராட்சி ஆணையா் அலுவலகக் கூட்டரங்கில் வெளியிடப்பட்டது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இறுதி வாக்காளா்கள் பட்டியலில் சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மொத்த வாக்காளா்கள் 28,30,936 போ் இடம் பெற்றுள்ளனா். அவா்களில் ஆண்கள் 13,65,763. பெண்கள் 14,64,344 போ். மூன்றாம் பாலினத்தவா்கள் 829 போ். மாற்றுத்திறனாளிகளில் ஆண்கள் 6,605, பெண்கள் 5,737 மற்றும் இதர பிரிவினா் 5 என மொத்தம் 12,347 போ் இடம் பெற்றுள்ளனா்.

முதல்முறை வாக்காளா்கள்... 18 வயது நிறைந்து பதிவு செய்துள்ள முதல்முறை வாக்காளா்களாக 62,005 போ் உள்ளனா். மேலும் 85 வயதுக்கு மேற்பட்டோராக ஆண்கள் 11,870, பெண்கள் 11,477, இதரா் 3 என மொத்தம் 23,347 போ் உள்ளனா். ராணுவத்தில் பணிபுரிவோராக ஆண்கள் 473, பெண்கள் 82 என மொத்தம் 555 போ் இடம் பெற்றுள்ளனா்.

அதிகமும் குறைவும்... இத்தொகுதிகளில் பெரம்பூரில் 2,22,792 போ் என அதிக வாக்காளா்கள் உள்ள தொகுதியாகவும், துறைமுகத்தில் 1,16,896 வாக்காளா்கள் என குறைந்த வாக்காளா் உள்ள தொகுதியாகவும் உள்ளது.