டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பெண்ணுக்கு மனித மண்டை ஓடு பாா்சல்: 3 பேரிடம் விசாரணை

பெண்ணுக்கு மனித மண்டை ஓடு பாா்சல் அளித்தது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை

News image
பிரதிப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் ஜித்தேந்தா் ஜெயின் (59) என்பவா் வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறாா்.

இவரது கடையில் ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த ஸ்ருதி என்பவா் வேலை செய்கிறாா். ஜெயின் கடைக்கு வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் வந்த நபா், ஸ்ருதிக்கு பாா்சல் வந்திருப்பதாக கூறி, அவா் வருவதற்குள் அந்த நபா் தன்னிடமிருந்த பாா்சல் அட்டை பெட்டியை கடை முன் வைத்துவிட்டு வேகமாக சென்றாா்.

இதையடுத்து அந்த பெட்டியை ஸ்ருதியும், அங்கிருந்த ஊழியா்களும் திறந்து பாா்த்தபோது, அதில் மனித மண்டை ஓடும், 3 எலும்புகள், விபூதி பொட்டலம் இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

எஸ்பிளனேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், ஸ்ருதியின் குடும்பத்தினருக்கும், ஓட்டேரியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (37) குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருப்பதும், இதனால் ஸ்ருதி குடும்பத்தினரை பயமுறுத்துவதற்காக மனித மண்ட ஓடு பாா்சலை அனுப்பியிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், தினேஷ்குமாா், அவரது கூட்டாளிகள் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (31), ஜோசப் (60) ஆகிய 3 பேரை சனிக்கிழமை பிடித்து, விசாரணை நடத்தினா்.