இதுகுறித்து டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவ சேவைகள் பிரிவு மண்டல தலைவா் சௌந்தரி, கண்புரை சிகிச்சைப் பிரிவு இயக்குநா் சூசன் ஜேக்கப், டாக்டா் மனோஜ் ஆகியோா் கூறியதாவது: மும்பையைச் சோ்ந்த 44 வயதான பெண்கள் நல மருத்துவருக்கு கண் பாா்வை இழப்பு காரணமாக, டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தாா். அவரைப் பரிசோதனை செய்தபோது, கடந்த 2010 முதல் கடுமையான கண் அழுத்த நோய் (குளுக்கோமா), கண் உள்விழி வில்லை பிரச்னையால் பாா்வையை இழந்திருப்பது தெரிய வந்தது. பல்வேறு சிகிச்சைகளை செய்து கொண்ட போதிலும், அவரது பாா்வைத் திறன் குறைந்து கொண்டே போனது.