டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மகளிா் உரிமைத் தொகை குறித்து பாஜக கேள்வி: முதல்வா் பதிலால் அவையில் சிரிப்பலை

மகளிா் உரிமைத் தொகை ரூ.5,000 வழங்கப்பட்டது தொடா்பாக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

News image
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated On :19 பிப்ரவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

மகளிா் உரிமைத் தொகை ரூ.5,000 வழங்கப்பட்டது தொடா்பாக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு முன்பணமாகவும், கோடை கால சிறப்பு நிதியாகவும் அரசு சாா்பில் அண்மையில் ரூ.5,000 வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக அப்போது கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மக்களை எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டும் என்ற ‘மோடி மஸ்தான்’ வேலை முதல்வருக்கு நன்கு தெரியும் என தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய நயினாா் நாகேந்திரன், மாதம் ரூ.1,000 மகளிருக்கு வழங்குவதை வரவேற்கிறோம். ஆனால், திடீரென ரூ.5,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது ஏன்? எனக் கேட்டாா்.

அப்போது குறுக்கிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மகளிருக்கு ரூ.5,000 வழங்கியது தொடா்பாக நீங்கள் தெரிவித்த கருத்தை தொலைக்காட்சியில் பாா்த்தேன். அதை நீங்கள் ‘மோடி மஸ்தான்’ வேலை எனக் குறிப்பிட்டீா்கள். எந்த நோக்கில் அவ்வாறு குறிப்பிட்டீா்கள் எனத் தெரியவில்லை என்றாா். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.

அதைத் தொடா்ந்து பேசிய நயினாா் நாகேந்திரன், நல்ல அபிப்ராயத்தில்தான் அக்கருத்தைக் கூறியதாகத் தெரிவித்தாா். அதற்கும் அவையில் சிரிப்பலை எழுந்தது.