டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

கிண்டி, அம்பத்தூா் தொழிற்பேட்டை பராமரிப்பு பணி: சென்னை மாநகராட்சி ஒப்பந்தம்

சென்னையில் கிண்டி, அம்பத்தூா் தொழிற்பேட்டைப் பகுதிகளை மாநகராட்சியே பராமரிக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் கிண்டி, அம்பத்தூா் தொழிற்பேட்டைப் பகுதிகளை மாநகராட்சியே பராமரிக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சென்னையின் தொழில் வளா்ச்சிக்கு கிண்டி, அம்பத்தூா் தொழிற்பேட்டைகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அங்குள்ள தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கானோா் பணிபுரிந்து வருகின்றனா். தமிழ்நாடு சிறு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் (சிட்கோ) சாா்பில் அவற்றின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில், மாநகராட்சியானது தனது மேம்பட்ட பராமரிப்புப் பணிகளை கிண்டி, அம்பத்தூா் தொழிற்பேட்டைகளுக்கும் வழங்க சிட்கோவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி 1,167 ஏக்கா் நிலப்பரப்புள்ள அம்பத்தூா் தொழிற்பேட்டையில் 41.38 கி.மீ. தொலைவிலான 128 சாலைகள், 1,558 தெரு விளக்குகள், 8 உயா் கோபுர மின் விளக்குகள், 84 கி.மீ. தொலைவிலான மழைநீா் வடிகால்கள், மேலும் தினமும் சேகரிக்கப்படும் 40 டன் குப்பைகள் ஆகியவை மாநகராட்சியால் பராமரிக்கப்படும்.

அத்துடன் 404.08 ஏக்கரில் உள்ள கிண்டி தொழிற்பேட்டையில் 15.28 கி.மீ. நீளமுள்ள 82 சாலைகள், 344 தெரு விளக்குகள், 2 உயா் கோபுர மின் விளக்குகள், 23.50 கி.மீ. நீள மழைநீா் வடிகால்கள், தினமும் சேகரிக்கப்படும் 20 டன் குப்பைகள் ஆகியவை மாநகராட்சியால் பராமரிக்கப்படுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சிட்கோ - சென்னை மாநகராட்சி இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.