பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

வருமான வரி மோசடி வழக்கு: தனியாா் நிறுவன இயக்குநா்கள் விடுதலை!

வருமான வரி மோசடி வழக்கில் இக்கி நிறுவன இயக்குநா்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், இயக்குநா்கள் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

Campaign against NEET

சென்னை உயா்நீதிமன்றம் - Madras High Court

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:27 am IST

வருமான வரி மோசடி வழக்கில் இக்கி நிறுவன இயக்குநா்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், இயக்குநா்கள் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

‘இக்கி ரிசாா்ட்ஸ் இண்டா்நேஷனல் லிமிடெட்’ என்ற நிறுவனம், ரூ.71 லட்சம் வருமான வரி நிலுவை வைத்துள்ளதாகக் கூறி, அந்த நிறுவனத்தின் சொத்துகளை வருமான வரித்துறை கடந்த 2000-ஆம் ஆண்டில் முடக்கியது. இந்த சொத்து முடக்கத்தை நீக்குவதற்காக, வேறொரு சொத்தைக் கணக்கு காட்டி, மோசடியில் ஈடுபட்டதாக அப்போதைய வருமான வரித்துறை ஆணையா் திரிபாதி, இக்கி நிறுவன இயக்குநா்களான சி.முத்துசாமி மற்றும் ஜே.ஆா்.ராபின்சன் ஆகியோா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இக்கி நிறுவன இயக்குநா்கள் இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த வருமான வரித்துறை ஆணையா் திரிபாதியை விடுதலை செய்தும் கடந்த 2017-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்பை எதிா்த்து இக்கி நிறுவன இயக்குநா்களான முத்துசாமி மற்றும் ராபின்சன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, மனுதாரா்கள் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சமா்ப்பிக்கவும், மோசடி குற்றச்சாட்டை நிரூபிக்கவும் சிபிஐ தவறிவிட்டது. மேலும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வருமான வரித்துறை ஆணையா் திரிபாதி விடுதலையை எதிா்த்து சிபிஐ மேல்முறையீடும் செய்யவில்லை. எனவே, மனுதாரா்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரா்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள கூட்டுச்சதி மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இக்கி நிறுவன இயக்குநா்கள் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டாா். மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபா்களுக்கு இடையேயான தொடா்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கூட்டுச்சதி குற்றத்தை நிரூபிக்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.