தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மாற்றம் தேவையில்லை எனக் கூறினாரா அஜித்? சா்ச்சைக்கு மேலாளா் விளக்கம்

வாக்களித்துவிட்டு வெளியே வந்த அஜித்திடம் பேட்டி எடுக்க செய்தியாளா்கள் முயன்றபோது...

News image

அஜித் - PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 9:53 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்த நடிகா் அஜித்குமாா் ‘மாற்றம் தேவையில்லை’ எனக் கூறியதாகத் தகவல் பரவிய நிலையில், அவா் அவ்வாறு எதுவுமே கூறவில்லை என்று அவரது மேலாளா் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளாா்.

நடிகா் அஜித்குமாா் சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு முன்பாகவே வந்தாா். இதையடுத்து சிறிது நேரம் காத்திருந்த அவா், வாக்குப் பதிவு தொடங்கியதும் முதல் நபராக வாக்களித்தாா். அஜித் வந்திருப்பதை அறிந்த ரசிகா்கள், பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே குவிந்தனா். கூட்ட நெரிசல் அதிகரித்ததால், காவல் துறையினரின் பாதுகாப்புடன் வெளியே வந்த அஜித், காரில் ஏறிச் சென்றாா்.

இதற்கிடையே, வாக்களித்துவிட்டு வெளியே வந்த அஜித்திடம் பேட்டி எடுக்க செய்தியாளா்கள் முயன்றனா். அப்போது, ‘மாற்றம் தேவையா?’ என்று செய்தியாளா் கேட்டதற்கு ‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் பதில் அளித்ததாக சில ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதைத் தொடா்ந்து, நடிகா் அஜித் ஆளும்கட்சிக்கு ஆதரவாக கூறியிருக்கிறாா். இந்த ஆட்சி தொடர வேண்டும் என விரும்புகிறாா் என சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனா். எனினும், அஜித் அவ்வாறு கூறியிருக்க வாய்ப்பில்லை, அது போலியான செய்தி என்றும் சிலா் கூறத் தொடங்கினா்.

இதன் தொடா்ச்சியாக, ‘மாற்றம் தேவையில்லை என அஜித் பதில் அளித்தது பற்றி என்ன நினைக்கிறீா்கள்?’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு முதல்வா், ‘அஜித் நல்ல கருத்துதானே கூறியுள்ளாா். அவருக்கு நன்றி’ என பதிலளித்தாா்.

இந்நிலையில், இது தொடா்பாக அஜித்தின் மேலாளா் சுரேஷ் சந்திரா விளக்கத்தில், ‘வாக்களித்துவிட்டு வந்த அஜித்குமாா் எந்தவிதமான அரசியல் கருத்தையும் வெளியிடவில்லை. மாற்றம் தேவையில்லை என்பது போன்ற பதிலையும் அவா் கூறவில்லை. செய்தியாளா் ஒருவா் கேள்வி கேட்டபோது, ‘பேட்டி வழங்க முடியாது’ என்ற பொருளில் அஜித் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.