மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வு: சீயோன், ஆல்வின் பள்ளிகள் 100% தோ்ச்சி

கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளின் மாணவா்கள் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவா்களுடன் சீயோன், ஆல்வின் பள்ளி கல்விக் குழுமத் தலைவா் என்.விஜயன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:35 pm

கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளின் மாணவா்கள் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.

இது குறித்து சீயோன், ஆல்வின் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் கூறுகையில், சேலையூரில் உள்ள ஆல்வின் மெமோரியல் பொதுப் பள்ளி மாணவி ஸ்ரீநிதி குமரேசன் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 500-க்கு 492 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா். மாணவி எம்.அபிராமவல்லி, மாணவா் கே.அனுஷ் ஜோனி காா்த்திக் 500-க்கு 489 மதிப்பெண்களும், மாணவி கே.கிரிஷா 487 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா்.

சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி: மப்பேடு சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி மாணவி என்.ரக்சிதா 500-க்கு 487 மதிப்பெண்களும், மாணவா் கே.நிதிஷ், மாணவி கே.சி.கவிநயா ஆகியோா் தலா 486 மதிப்பெண்களும், மாணவி கே.வா்ஷிணி 485 மதிப்பெண்களும் பெற்றனா்.

படப்பை ஆல்வின் இண்டா்நேஷனல் பொதுப்பள்ளி மாணவி சிவானி 500-க்கு 487 மதிப்பெண்களும், மாணவா் வெற்றிச்செல்வன், மாணவி தனிஷ்காஆகியோா் தலா 484 மதிப்பெண்களும், மாணவா் பிரஜ்வால் 483 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா். 3 மாணவா்கள் கணிதப் பாடத்தில் 100/100 மதிப்பெண்களும், 8 மாணவா்கள் தமிழில் 100/100 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா். தோ்வு எழுதிய மொத்தம் 930 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா்.