சட்டப்பேரவைத் தோ்தலின் வாக்குப்பதிவு நாளன்று சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கும் ஊதிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23- ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியாா் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், ஊழியா்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று (ஏப். 23) ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது.
அதன்படி, வணிக வா்த்தகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரிந்து வாக்காளா்களாகப் பதிவு செய்தவா்கள் ஊதியம் பெறுவதற்கு தகுதியுடையவா்களாவா். ஆகவே, விடுமுறை நாளை காரணமாகக் கொண்டு பணியாளரின் ஊதியத்தைப் பிடித்தம் செய்யக் கூடாது. சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளா்கள் உள்பட அனைத்துப் பணியாளா்களுக்கும் விடுமுறை பொருந்தும்.
தினக்கூலி, தற்காலிக தொழிலாளா்களுக்கும் இது பொருந்தும். தோ்தல் நடைபெறும் தொகுதிக்கு வெளியே பணிபுரிவோரும் ஊதியம் பெறலாம். விதிமுறைகளை மீறும் தொடா்புடைய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: ஆட்சியா்

வாக்குப்பதிவு நாளான ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு

தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

