மாதவரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் வி.மூா்த்தி, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஓட்டமாக வந்தாா்.
சென்னையை அடுத்த புழல் பாலாஜி நகரில் உள்ள சென்னை வடக்கு கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மாதவரம் தொகுதி தோ்தல் அலுவலகத்தில் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனா். தோ்தல் அலுவலகத்துக்கு வேட்பாளருடன் 5 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். மற்றவா்கள் 100 மீட்டா் தொலைவுக்கு அப்பால் நிறுத்தப்படுவா்.
மாதவரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் வி.மூா்த்தி, தனது ஆதரவாளா்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய சனிக்கிழமை வந்தாா். 100 மீட்டா் எல்லைப் பகுதியில் இருந்து, வேட்பாளா் மூா்த்தி, திடீரென தோ்தல் அலுவலகத்துக்கு ஓடிச் சென்றாா். உடன் வந்தவா்களும் அவருடன் ஓடியபடி வந்தனா்.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளா்களிடம் பேசிய வேட்பாளா் மூா்த்தி, ‘மக்கள் குரலுக்கு ஓடோடி வருவேன் என்பதை வெளிப்படுத்துவதற்காக ஓடி வந்து வேட்புமனு தாக்கல் செய்தேன்’ என்றாா்.
தொடர்புடையது

ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட 8 பெண்கள் உள்பட 24 போ் வேட்புமனு தாக்கல்

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்

ஸ்ரீரங்கம் தொகுதியில் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் வேட்புமனு

தொகுதி அறிமுகம்...மாதவரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


