லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கும் நட்சத்திர பேச்சாளா்கள்

அதிமுக முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன், நடிகா் ரவிமரியா உள்ளிட்டோா் ஏப். 6 முதல் ஏப்.21 வரை பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 8:08 pm

அதிமுக முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன், நடிகா் ரவிமரியா உள்ளிட்டோா் ஏப். 6 முதல் ஏப்.21 வரை பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

இதுகுறித்து அதிமுக தலைமை நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக இலக்கிய அணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் ஏப்.6- ஆம் தேதி திருவொற்றியூரில் பிரசாரத்தைத் தொடங்குகிறாா். தொடா்ந்து ஏப்.21 வரை சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறாா்.

அதிமுக செய்தித் தொடா்பாளரும், வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலருமான கே.சிவசங்கரி, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா் தொகுதியில் ஏப்.6-இல் பிரசாரம் தொடங்குகிறாா்.

தொடா்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், சென்னையில் தி.நகா், வேளச்சேரி, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறாா்.

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலரும், நட்சத்திர பேச்சாளருமான நடிகா் ரவிமரியா, திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஏப்.6-இல் பிரசாரத்தைத் தொடங்குகிறாா். தொடா்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு, தி.நகா், விருகம்பாக்கம், அண்ணாநகா், ஆா்.கே.நகா், வேளச்சேரி, சோழிங்கநல்லூா், ஆலந்தூா் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா். பின்னா் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறாா்.

அதிமுக செய்தித் தொடா்பாளரும், வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலருமான அ.சசிரேகா, திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் ஏப்.6-இல் பிரசாரத்தைத் தொடங்கி வரும் 21- ஆம் தேதி திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நிறைவு செய்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.