மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னையில் தீ விபத்து! ரூ. 1 கோடி மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்!

சென்னையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக...

News image

சென்னையில் தீ விபத்து - படம்: DNS

Updated On :2 ஏப்ரல் 2026, 1:03 pm

சென்னை ஜி.பி. சாலையில் சத்தியமூர்த்தி பவன் அருகே மின்சாரம் பாய்ந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கார் உதரி பாகங்கள் தீயில் கருகி நாசமாகின.

இதனால், அந்தச் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்படைந்து, பரபரப்பான சூழல் காணப்பட்டு வருகிறது.

சென்னை அண்ணா சாலையில் எல்ஐசி கட்டடம் அருகே ஜி.பி. சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் மூன்றாவது மாடியில் அஜித் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ மொபைல் உதரி பாகங்கள் குடோன் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

குடோனில் இருந்த ஊழியர்கள் தீயை அனைக்க முயற்சித்தபோது, திடீரென தீ வேகமாக பற்றி எரிந்தது. இதனால், குடோனில் பணிபுரிந்த ஊழியர்கள், பொதுமக்கள் அங்கிருந்துக் கீழே இறங்க தொடங்கினர்.

மேலும், இது குறித்து எழும்பூர் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் கூடுதலாக திருவல்லிக்கேணி, வேப்பேரி, பாரிமுனை, கீழ்ப்பாக்கம் , தேனாம்பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 7-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து வருகின்றனர்.

மேலும், கார் உதிரி பாகங்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து அருகிலுள்ள கடைகளுக்கும் தீ பற்றத் தொடங்கியது.

தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

குடோனில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும், கடையில் இருந்த சுமார் ஒரு கோடி மதிப்புடைய பொருள்கள் எரிந்து நாசம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

Summary

Car spare parts worth one crore rupees were destroyed in a fire caused by an electrical surge near Sathyamurthy Bhavan on G.P. Road in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.