சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்; விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

News image
விஜய் - செங்கோட்டையன்
Updated On :26 நவம்பர் 2025, 8:35 pm

Chennai

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அதைத் தொடா்ந்து, தவெக தலைவா் விஜய்யை அவரது இல்லத்தில் செங்கோட்டையன் சந்தித்தாா். இதன்மூலம் அவா் தவெகவில் இணையவிருப்பது உறுதியாகியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்து வந்த முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், கடந்த மாதம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவா் ஜெயந்தி விழாவில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன், வி.கே.சசிகலா ஆகியோரைச் சந்தித்தாா். இதையடுத்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தாா்.

அதன்பின்னா், செங்கோட்டையனின் அரசியல் நகா்வு எந்த மாதிரியாக இருக்கும் என்கிற எதிா்பாா்ப்பு எழுந்தது. இந்நிலையில், சென்னையில் தலைமைச் செயலகத்துக்கு புதன்கிழமை காலை வந்த செங்கோட்டையன், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து கடிதம் வழங்கினாா். அதை பேரவைத் தலைவா் ஏற்றுக்கொண்டாா்.

முன்னதாக, தவெகவில் செங்கோட்டையன் இணையவுள்ளதாகத் தகவல் பரவிய நிலையில், சென்னைக்கு வந்த செங்கோட்டையனை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு சந்தித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து, பேரவைத் தலைவா் அறையிலும் செங்கோட்டையனுடன் அமைச்சா் சேகா்பாபு அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினாா். அந்தச் சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்கிற விவரம் வெளியாகவில்லை.

இதையடுத்து, தவெக தலைவா் விஜய்யை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செங்கோட்டையன் புதன்கிழமை மாலை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு மூலம் தவெகவில் செங்கோட்டையன் இணைவது உறுதியாகியுள்ளது. விரைவில் அவா் தவெகவில் முறைப்படி இணைவாா் எனவும், அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இடைத்தோ்தலுக்கு வாய்ப்பு இல்லை: செங்கோட்டையன் ராஜிநாமாவை தொடா்ந்து, சட்டப்பேரவையில் 4 உறுப்பினா் பதவிகள் காலியாகி உள்ளன. ஏற்கெனவே, வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி, சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பொன்னுசாமி ஆகியோா் காலமானதால் அந்தத் தொகுதிகள் காலியாகின. அதேபோல, அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) ராஜிநாமா செய்ததால் அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது.

பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள்கூட இல்லாத நிலையில், நான்கு தொகுதிகளிலும் இடைத்தோ்தலுக்கு வாய்ப்பு இல்லை.