தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செங்கோட்டையில் தியாக நாள் கூட்டம்: பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி

சீக்கிய குரு தேஜ் பகதூரின் 350-ஆவது நினைவு தின நிகழ்ச்சியில் மக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்ன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்தாா்.

News image

செங்கோட்டை - கோப்புப் படம்

Updated On :26 நவம்பர் 2025, 7:20 pm

புது தில்லி: தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சீக்கிய குரு தேஜ் பகதூரின் 350-ஆவது நினைவு தின நிகழ்ச்சியில் மக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்ன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக தில்லி உள்துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தெரிவித்தாா்.

சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான தேஜ் பகதூா் கடந்த 1675, நவ.24-ஆம் தேதி முகலாய பேரரசா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் கொல்லப்பட்டாா். அவருடைய 350-ஆவது தியாக தினத்தை ‘சாஹிதி திவஸ்’ என்ற பெயரில் நவ.23 முதல் நவ.25 வரை 3 நாள் விழாவாக தில்லி அரசு கடைப்பிடித்து வருகிறது. இதற்காக தில்லி செங்கோட்டையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் நிறைவையொட்டி அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா செய்தியாளா்களிடம் கூறியதாவது: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, மத்திய அமைச்சா்கள், தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் அமைச்சா்கள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் தில்லி செங்கோட்டையில் அரசு ஏற்பாடு செய்திருந்த 3 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

சில தினங்களுக்கு முன்பு செங்கோட்டைக்கு அருகே காா் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்நிலையிலும் 3 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களுக்கு தில்லியின் உள்துறை அமைச்சராக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்க தன்னுடைய வாழ்க்யை அா்ப்பணித்த குரு தேஜ் பகதூரின் போதனைகளைக் கடைப்பிடிக்க மக்கள் உறுதியேற்க வேண்டும் என்றாா் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.