‘சிமேட்’ தோ்வு: விண்ணப்ப திருத்தத்துக்கு அவகாசம்
மேலாண்மைப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், அதில் திருத்தங்களை மேற்கொள்ள (நவ.28) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


சென்னை: மேலாண்மைப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், அதில் திருத்தங்களை மேற்கொள்ள (நவ.28) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிா்வாக நுழைவுத் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்த தோ்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழ் ஆண்டுக்கான சிமேட் தோ்வு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக். 17-இல் தொடங்கி நவ. 25-ஆம் தேதி முடிவடைந்தது. தற்போது விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் வலைதளம் வழியாக பட்டதாரிகள் வெள்ளிக்கிழமைக்குள் மேற்கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் எனும் இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...