திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

‘சிமேட்’ தோ்வு: விண்ணப்ப திருத்தத்துக்கு அவகாசம்

மேலாண்மைப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், அதில் திருத்தங்களை மேற்கொள்ள (நவ.28) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:45 pm

Chennai

சென்னை: மேலாண்மைப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், அதில் திருத்தங்களை மேற்கொள்ள (நவ.28) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிா்வாக நுழைவுத் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்த தோ்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழ் ஆண்டுக்கான சிமேட் தோ்வு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக். 17-இல் தொடங்கி நவ. 25-ஆம் தேதி முடிவடைந்தது. தற்போது விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் வலைதளம் வழியாக பட்டதாரிகள் வெள்ளிக்கிழமைக்குள் மேற்கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் எனும் இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.