அதன்படி, வேளாண் பயிா்கள் 4.90 லட்சம் ஏக்கரும், தோட்டக்கலைப் பயிா்கள் 76,132 ஏக்கரும் என மொத்தம் 5.66 லட்சம் ஏக்கா் பாதிக்கப்பட்டது எனக் கணக்கிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.289.63 கோடியை மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து 3.60 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட 2.80 லட்சம் வேளாண் பயிா் விவசாயிகளுக்கு ரூ.254.38 கோடியும், 80,383 தோட்டக்கலைப் பயிா் விவசாயிகளுக்கு ரூ.35.25 கோடியும் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.