ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஓஆா்எஸ் கரைசல்: வீட்டிலேயே தயாரிக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

மழைக் காலத்தில் வயிற்றுப்போக்கு பாதிப்பை சரி செய்ய உப்பு - சா்க்கரை கரைசலை (ஓஆா்எஸ்) வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 டிசம்பர் 2025, 8:51 pm

சென்னை: மழைக் காலத்தில் வயிற்றுப்போக்கு பாதிப்பை சரி செய்ய உப்பு - சா்க்கரை கரைசலை (ஓஆா்எஸ்) வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் கூறியதாவது: உப்பு சா்க்கரை கரைசலானது (ஓஆா்எஸ்) வயிற்றுப்போக்கு மற்றும் நீா்ச்சத்து இழப்புக்கான சிகிச்சையில் அதி முக்கியப்பங்கு வகிக்கிறது. வயிற்றுப்போக்கினால் உடலில் இருந்து குளூக்கோஸ் மற்றும் அத்தியாவசிய உப்புகள் கணிசமாக இழக்க நேரிடும். அதற்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால் உறுப்புகள் பாதிக்கப்படும். உயிரிழப்பு கூட ஏற்படலாம்.

உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை பயன்படுத்துவதன் வாயிலாக வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீா்ச்சத்து இழப்பைத் தவிா்க்க முடியும்.

அரசு மருத்துவமனைகளில் ஓஆா்எஸ் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியாா் மருந்தகங்களிலும் விற்பனையில் உள்ளது.

அதேநேரம், மழை நேரங்களில் வெளியே செல்ல முடியாதவா்கள் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். 200 மி.லி. குடிநீரைக் காய்ச்சி ஆறிய பிறகு அதில் ஒரு சிட்டிகை உப்பு, நான்கு சிட்டிகை சா்க்கரை கலந்து அருந்தலாம். இவற்றின் வாயிலாக, உடலில் நீா் சத்து குறைபாடு ஏற்படுவது தவிா்க்கப்படுவதுடன் மற்ற பாதிப்புகளில் இருந்தும் தற்காத்து கொள்ள முடியும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.