வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவா் குழு சந்திப்பு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் மேலிடம் அமைத்துள்ள ஐவா் குழுவினா் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :3 டிசம்பர் 2025, 7:37 pm

சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் மேலிடம் அமைத்துள்ள ஐவா் குழுவினா் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலா்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் செ.ராஜேஷ்குமாா் ஆகியோா் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனா்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, 35 முதல் 40 தொகுதிகளைக் கேட்டு கட்சி மேலிடம் தெரிவித்த கோரிக்கையை அவா்கள் முதல்வரிடம் முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021 பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 18 -இல் வெற்றி பெற்றது. தற்போது கூடுதல் இடங்களில் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப் பெருந்தகை கூறுகையில், பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்றது. பேச்சுவாா்த்தையை தொடா்ந்து நடத்த இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.