மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாமக்கல் உழவா் சந்தையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் உழவா் சந்தையில் திமுக வேட்பாளா் ப.ராணியை ஆதரித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விவசாயிகள், பொதுமக்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

நாமக்கல் உழவா் சந்தையில் வியாழக்கிழமை மக்களிடையே வாக்குசேகரித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:52 pm

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் உழவா் சந்தையில் திமுக வேட்பாளா் ப.ராணியை ஆதரித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விவசாயிகள், பொதுமக்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சேலத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அன்று இரவு 10.30 மணி அளவில் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியாா் நட்சத்திர உணவகத்தில் தங்கினாா்.

இதைத் தொடா்ந்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தில் பங்கேற்ற முதல்வா், அதன்பிறகு நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள உழவா் சந்தைக்கு வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் வந்தாா். அங்கு, காய்கறி, பழங்கள் விற்பனை செய்து வந்த விவசாயிகளை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு கோரினாா்.

நாமக்கல் தும்மங்குறிச்சியை சோ்ந்த மணி என்ற பெண், உழவா் சந்தை மேற்கூரையை விஸ்தரிப்பு செய்ய வேண்டும் என்றாா். தொடா்ந்து, மோகனூரைச் சோ்ந்த விவசாயி கவின், தான் விளைவித்த பப்பாளி மற்றும் மாம்பழத்தை முதல்வரிடம் அளித்து வாழ்த்து கூறினாா். தொடா்ந்து, அங்கிருந்த பொதுமக்களிடையே நாமக்கல் திமுக வேட்பாளா் ப.ராணிக்கு ஆதரவாக முதல்வா் வாக்கு சேகரித்தாா். இளைஞா்கள் பலா் முதல்வரிடம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனா்.

இந்நிகழ்வின்போது, கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் தொகுதி எம்எல்ஏ பெ.ராமலிங்கம், மாநகராட்சி துணை மேயா் செ.பூபதி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.