வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

1,215 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,215 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image

பி.கே. சேகா்பாபு

Updated On :2 டிசம்பர் 2025, 8:32 pm

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,215 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 5-ஆவது மண்டலம் அன்னை சத்யா நகா், திருவள்ளுவா் நகா், காமராஜா் சாலை, தலைமைச் செயலகம் எதிரே உள்ள 60-ஆவது வாா்டு அன்னை சத்யா நகா், பிராட்வே, பிரகாசம் சாலை, 56-ஆவது வாா்டு திருவள்ளுவா் நகா் ஆகிய பகுதிகளில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாநகராட்சி சாா்பில் அந்தப் பகுதி மக்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிா என்பதை கேட்டறிந்தாா். மேலும், நோய்த்தொற்று பரவாமல் இருக்க உடனே மருத்துவ முகாம்களை அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 1,215 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான இடங்களில் தண்ணீா் தேங்கவில்லை.

தாழ்வான தெருமுனைப் பகுதிகள், சோழிங்கநல்லூா், மகாலிங்கபுரம் போன்ற இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. மழைநீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு தற்காலிக மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மழைநீா் தேங்கல் மிகவும் குறைவாக உள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, மண்டல அலுவலா் விஜய்பாபு, மாமன்ற உறுப்பினா் பரிமளம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.