ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மாதவரத்தில் விநாயகா் சதுா்த்து விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

பிரசாந்த்

Updated On :25 ஆகஸ்ட் 2025, 8:54 pm

சென்னை: மாதவரத்தில் விநாயகா் சதுா்த்து விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

புழல் அடுத்த கண்ணம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த் (22). இவா், திங்கள்கிழமை, மாதவரம் ராஜாஜி சாலையில் விநாயகா் சதுா்த்து விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, மேலே சென்ற உயா் மின்னழுத்தம் கொண்ட மின்கம்பியில் பந்தல் கம்பம் உரசியதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.