டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

நாளை முதல் மந்தைவெளி பேருந்துகள் தற்காலிக இடத்துக்கு மாற்றம்

மந்தைவெளி பேருந்து நிலையம் நவீன பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றி அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளதால்,

News image
Updated On :25 ஆகஸ்ட் 2025, 8:53 pm

Chennai

சென்னை: மந்தைவெளி பேருந்து நிலையம் நவீன பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றி அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளதால், இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் புதன்கிழமை (ஆக. 27) முதல் தற்காலிக இடங்களில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மந்தைவெளி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் தடம் எண் 21, 41 டி, எஸ் 17, 49 கே, எஸ் 5 பேருந்துகள், மந்தவெளி எம்ஆா்டிஎஸ் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்தும், தடம் எண் 49 கே வழித்தடப் பேருந்து, பட்டினம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும், தடம் எண் 12 எம் வழித்தடப் பேருந்து, லஸ் காா்னா் அருகில் இருந்தும் இயக்கப்படும்.

மேலும், மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் பட்டினம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.