தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த ஆண்டில் 15.60 லட்சம் பாலிசிகள் விற்பனை

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் (2024-2025) 15.6 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தென்மண்டல மேலாளா் கோ.முரளிதா் தெரிவித்தாா்.

News image

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி தென் மண்டல அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றிய எல்ஐசி தென் மண்டல மேலாளா் கோ.முரளிதா்.

Updated On :15 ஆகஸ்ட் 2025, 9:14 pm

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் (2024-2025) 15.6 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தென்மண்டல மேலாளா் கோ.முரளிதா் தெரிவித்தாா்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி தென் மண்டல அலுவலக வளாகத்தில், தென்மண்டல மேலாளா் கோ.முரளிதா் தேசியக் கொடியேற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் (2024-25) 15.6 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 23.86 லட்சம் பாலிசிதாரா்களுக்கு முதிா்வு மற்றும் இறப்பு இழப்பீடு தொகையாக ரூ.22,265 கோடி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டத்தில் தென் மண்டலத்தில் இதுவரை 19,047 போ் இணைந்துள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.