டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

எதைப் படித்தேன்?

ஆங்கில எழுத்தாளர் கொல்லீன் ஹூவர் எழுதிய "இட் எண்ட்ஸ் வித் அஸ்' நாவலைப் படித்துள்ளேன்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 11:47 am

DIN

Story image

ஆங்கில எழுத்தாளர் கொல்லீன் ஹூவர் எழுதிய "இட் எண்ட்ஸ் வித் அஸ்' நாவலைப் படித்துள்ளேன். தற்போது பிரீதா ராஜா கண்ணனின் "சிவா இன் த சிட்டி ஆப் நெக்டார்', "சன் ஆஃப் சிவா' மற்றும் மைனு மாரியலின் "த பி புக்' ஆகியவற்றை வாங்கிச்செல்கிறேன்.
 ஹரிணி, பள்ளி மாணவி, அரும்பாக்கம்.
 
 
 

Story image

சே குவேராவின் வாழ்க்கை வரலாற்று நூலை படித்துள்ளேன். ப.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி', கி.ராஜநாராயணனின் "கோபல்ல
 கிராமம்', சுந்தர ராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை' ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.
 எஸ். விமல்,
 கணினிப் பொறியாளர், பூந்தமல்லி.
 
 

Story image

 ரஷிய எழுத்தாளரான தாஸ்தோவ்ஸ்கி எழுதிய "குற்றமும் தண்டனையும்', பிரேசில் எழுத்தாளர் பௌல் கொயால்கோ எழுதிய "ரசவாதி' நாவலையும் படித்துள்ளேன்.
 சல்மான் ருஷ்டியின் "நள்ளிரவுக் குழந்தைகள்', புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புக் கதைகள் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.
 எஸ்.செந்தில் ஆண்டவர்,
 விசைத்தறிக்கூட அதிபர், ராஜபாளையம்.
 
 
 

Story image

இந்திராநூயி எழுதிய அவரது "வாழ்க்கை வரலாறு' நூலைப் படித்துள்ளேன். நிவேதிதா லூயிஸ் எழுதிய "முதல் பெண்கள்' நூல் 2 பாகங்கள், வே.குமரவேல் எழுதிய "எங்கே அந்த சொர்க்கம்', பதிப்புத் துறை முன்னோடி முல்லை முத்தையா நூற்றாண்டு மலர் மற்றும் கி.வா.ஜகந்நாதன் எழுதிய "என் ஆசிரியப்பிரான்' உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்கிறேன்.
 இ.செல்வராஜ், தொழிலதிபர், சென்னை.
 
 
 

Story image

யுவல் நோவா ஹராரி எழுதிய "சேப்பியன்ஸ்' ஆங்கில நூலைப் படித்துள்ளேன். மா எழுதிய "கற்பிதம் அல்ல பெருமிதம்', டாக்டர் ஆர்.கார்த்திகேயன் எழுதிய "மனசு போல வாழ்க்கை 2.0' ஆகிய நூல்களை வாôங்கிச் செல்கிறேன்.
 வி.ப்ரீத்தி, பட்டதாரி, செங்கல்பட்டு.
 
 
 

Story image

ஸர்மிளா ஸெய்யித் எழுதிய "அடங்க மறு' மற்றும் மார்க்சிம் கார்க்கியின் "தாய்' நாவல் ஆகியவற்றைப் படித்துள்ளேன்.
 புத்தகக் காட்சியில் பக்தவத்சல பாரதியின் "சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்' என்னும் கட்டுரைத் தொகுப்பையும், ரா.தட்சிணாமூர்த்தியின் "அன்புள்ள மகளே' எனும் தாய் மகளுக்கு எழுதியதாக உள்ள நூலையும் வாங்கிச்செல்கிறேன்.
 ஆர்.யமுனா, போட்டித் தேர்வு பயிற்சி நிறுவன மாணவி, ஆவடி, சென்னை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.