//

அனைவரையும் கவரும்...

புத்தகக் காட்சியில் எப்-57 அரங்கில் அமெரிக்க மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:42 pm

DIN

புத்தகக் காட்சியில் எப்-57 அரங்கில் அமெரிக்க மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தில் உள்ள அமெரிக்கன் சென்டர் நூலகத்தில் சுமார் 16 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
 அமெரிக்காவின் கல்வி, கலை, பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அந்தப் புத்தகங்கள் உள்ளன. அந்த மையம் சார்பில் புத்தகக் காட்சியில் அரங்கம் அமைத்து ஏராளமான புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 சென்னை புத்தகக் காட்சியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில், அமெரிக்கக் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மார்ஸ் ரோவர் ஆப்பர்சுனிட்டி சந்திரனில் தடம் பதித்த மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.
 அதில் குழந்தைகள் முகம் காட்டி புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். மேலும், செவ்வாய் கிரக ஆய்வு தொடர்பான செயல்பாடுகள் உள்ளிட்ட விளக்கங்களும் அரங்கில் இடம் பெற்றுள்ளதாகக் கூறுகிறார் அரங்கு பொறுப்பாளர்
 சித்ரகலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.