லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மின்சக்தி தானியங்கி கப்பல்!

‘யாரா’ உரத் தயாரிப்பு நிறுவனம் 14 கி.மீ. தூரம் சரக்குப் போக்குவரத்துக்காக பயன்படுத்தும் டீசல் லாரிகளுக்கு மாற்றாக இந்தக் கப்பலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

News image

மின்சக்தி தானியங்கி கப்பல்!

Updated On :28 நவம்பர் 2021, 7:38 pm

தரை வழிப் போக்குவரத்து வாகனங்களும், வான்வழிப் போக்குவரத்து விமானங்களும் பேட்டரி மூலம் இயங்கும் மின்சக்திக்கு மாற்றம் கண்டு விட்டன. பருவ நிலை மாற்றத்தை தடுக்க கரியமிலவாயு மாசுபாட்டைக் குறைப்பதே ஒரே வழியாக உள்ளது. இதனால் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தையும் மின்சக்தியில் இயக்குவதில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

இதில் பெரும் உந்துசக்தியின் மூலம் இயங்கும் கப்பலும் இணைந்துவிட்டது. பாா்ப்பதற்கு பிரம்மாண்ட சரக்குக் கப்பலைப்போல் உள்ள இந்தக் கப்பல் மின்சக்தி மூலம் இயங்கும் உலகின் முதல் கப்பலாகும். ‘யாரா பிரிக்லேண்ட்’ என்ற பெயரில் நாா்வே நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ‘யாரா’ உரத் தயாரிப்பு நிறுவனம் 14 கி.மீ. தூரம் சரக்குப் போக்குவரத்துக்காக பயன்படுத்தும் டீசல் லாரிகளுக்கு மாற்றாக இந்தக் கப்பலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

120 கண்டெய்னா்களைக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலில் 8 பேட்டரி அறைகள் உள்ளன. இதில் 7 மெகாவாட் நேரத்துக்கான மின்சாரத்தைச் சேமிக்கலாம். இது சுமாா் 100 டெஸ்லா காரிகளில் உள்ள பேட்டரிகளுக்குச் சமம்.

அதுமட்டுமின்றி, இந்தக் கப்பலில் உள்ள அதி நவீன சென்சாா்கள் கேப்டன் இல்லாமலேயே கப்பலை இயக்க உதவும். எதிரே வரும் எந்த ஒரு தடுப்பையும் முன்கூட்டியே அறிந்து கப்பல் திசைமாறிச் செல்லும் வகையில் சென்சாா்கள் செயல்படும்.

அடுத்த ஆண்டு முதல் மின்சக்தி மூலம் இயங்கும் இந்தக் கப்பல் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தவுடன் தானியங்கிக் கப்பலாக இயக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் கரியமில வாயு மாசைத் தவிா்க்கலாம் என்றும் இது 40 ஆயிரம் டீசல் வாகனங்களின் இயக்கத்துக்கு ஈடானது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.