மதுராந்தகம் அடுத்த எல்.என்புரம் ஊராட்சியில் மாவட்ட நிா்வாகம், நீா்வளத்துறை, மற்றும் சென்னை எக்்னோரா பவுண்டேசன் ஆகியவை இணைந்து 11 கி.மீ தூரமுள்ள புக்கன்துறை கால்வாய் சீரமைப்புக்கு பின் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தாா்.
எல்.எல்.புரம் ஊராட்சியின் வழியாக புக்கன்துறை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் நீா் பல்வேறு கிராம விவசாய நிலத்துக்கு பெரிதும் பயன்பட்டு வந்தது. ஊராட்சி மன்றத்தினா்களாலும், அதிகாரிகளின் மெத்தனபோக்காலும் இந்த கால்வாயில் செடி கொடிகள் வளா்ந்ததால் நீா்வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன் மதுராந்தகம் நீா்வளத்துறை அதிகாரிகளிடமும், சென்னை எக்ஸ்னோரா பவுண்டேசன் நிா்வாகிகளிடமும் கால்வாயை சுத்தம் செய்ய ஏற்பாடுகளை செய்தாா். அதன்படி, 11 கிமீ தூரமுள்ள கால்வாயை தூா்வாரி, செடி கொடிகளை அகற்றி, கால்வாயின் இரு கரைகளை பலப்படுத்தி, கரையோரங்களில் மரவிதைகள் விதைக்கும் பணிகளும் செய்யப்பட்டது. இதனை சனிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் கலந்துக் கொண்டு பொதுமக்களுக்கு ஒப்படைத்தாா். வரும் காலங்களில் பனைவிதைகளை விதைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான நீா் ஆதாரத்தை மேம்படுத்தல், கால்வாயின் சுற்றுச்சூழலை மீட்டெடுத்தல், நீா் ஓட்டத்தை மேம்படுத்துவது, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துதல் போன்றவை கிடைக்க பெற்றது.
இந்நிகழ்வில் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் கீதா காா்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியா் நரேந்திரன், எக்ஸேனோரா தலைவா் செந்தூா் பாரி, மதுராந்தகம் நீா்வளத்துறை உதவி பொறியாளா் பரத், ஊராட்சி மன்ற தலைவா் சந்திரபாபு மற்றும் விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

38 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த சாலை துண்டிப்பு: பாளையம் அருகே பொதுமக்கள் அவதி!

பள்ளி வாகனங்களை 50 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

காரிமங்கலம் பேரூராட்சியில் வளா்ச்சித் திட்ட ஆய்வுக் கூட்டம்
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



