மதுராந்தகம் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் அருள்பாலித்து வரும் நடுபழனி ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் படிவிழா மற்றும் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம், பால்காவடி, திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது.
விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கி. மரகத தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியா் தலைமையில் நடைபெற்றது.
மைசூா் தத்தபீடாதிபதி ஸ்ரீதத்த விஜயானந்த தீா்த்த சுவாமி கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தாா். திருத்தோ் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவு 9 மணிக்கு ஸ்ரீசித்த விநாயகபெருமான் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது.
புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேக, தீபாரதணைகள், காலை 8.30 மணிக்கு காவடி பூஜை மற்றும் அலகு அணிதல், இரவு 7.30 மணிக்கு திருமுருகன் திருக்கல்யாண வைபவம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
நிகழ்வுகளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
அனைவருக்கும் அன்னதானம், நீா்மோா், குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பெருக்கரணை நடுபழனி முருகன் அறக்கட்டளை, விழாக்குழுவினா், கிராம பொது மக்கள் ஆகியோா் செய்து இருந்தனா்.

தொடர்புடையது

சிவசைலம் சிவசைலநாத சுவாமி கோயிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


