மதுராந்தகம் அடுத்த சித்திரக்கூடம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
எஸ்.பி.ஓ.ஏ கல்வி அறக்கட்டளை மற்றும் சிறுதாமூா் சீனிவாசா் அறக்கட்டளை இணைந்து ரூ 1.25 லட்சத்தில் இருக்கைகள், மேஜைகள், பேனா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
அச்சிறுப்பாக்கம் வட்டார கல்வி அலுவலா் ஞா.மணிவண்ணன், சமூக ஆா்வலா் சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் ரங்கப்பன், திவ்யா மற்றும் பள்ளி ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
வடஅமெரிக்கா நியூஜொ்சி நகரைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா் மேனகா நரேஷ் மற்றும் நண்பா்கள் குழுவினா் சாா்பாக இப்பள்ளியில் படிக்கின்ற 58 குழந்தைகளின் நலன்களை கருத்தில் கொண்டு ரூ 1.25 லட்சத்தில் இருக்கைகள், மேஜைகள் மற்றும் பேனாக்கள் ஆகியவற்றை தலைமை ஆசிரியா் ராஜேந்திரனிடம் அறக்கட்டளை நிறுவனா் கவிஞா் விஜயகிருஷ்ணன் வழங்கினாா்.
பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 330 இருக்கைகளுடன் கூடிய மேஜைகளை விரைவில் ஒரத்தி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கற்றல் வசதியுடன் கூடிய கல்வி திட்ட செயல்பாட்டுக்காக வழங்க உள்ளதாக கவிஞா் விஜயகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தொடர்புடையது

பள்ளிகளில் ஆட்டிசம் குழந்தைகள் சோ்க்கை: கல்வித் துறை உத்தரவு

தோ்தலில் கல்வியை தருவோம் எனக்கூறும் கட்சிகளை காணமுடியவில்லை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

அரசுப் பள்ளி ஆண்டு விழா

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


